Friday, February 8

காதிரிய்யஹ் றாத்திபுடன் நிகழ்ந்த 69வது ஜனன தினம்.

காதிரிய்யஹ் திரு்சசபையின் நினைவுப் பரிசு.
புனித காதிரிய்யஹ் திருச்சபையின் றாத்திப் மஜ்லிஸ் அதி சங்கைகுரிய ஷெய்குநாயகம் கலாநிதி ஷம்ஸுல் உலமா மௌலவீ அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (தால உம்றுஹு) அவர்களின் முரீதின்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதாக காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலில் பிரதி மாதமும் முதலாம் சனிக்கிழமைகளில் இடம் பெற்று வருவது வழக்கமாகும்.


இம்மாதத்திற்காக மேற்குறித்த றாத்திப் மஜ்லிஸ் வழமைக்கு மாறாக 05.02.2013 செவ்வாய் கிழமை மாலை 8.00 ஒரு திறந்த மஜ்லிஸாக அனைவரும் கலந்து கொள்ளக்கூடிய அடிப்படையில் இடம் பெற்றது.

முழு புகைப்படங்கள் அடங்கிய விசேட தொகுப்பு..


அதி சங்கைகுரிய ஷெய்கு நாயகம் அவர்களின் ஜனன தினம் இம் மாதம் 05.02.2013 ஆகையால் புனித காதிரிய்யஹ் திருச்சபையின் றாத்திப் மஜ்லிஸுடன் இணைந்ததாக அதி சங்கைகுரிய ஷெய்கு நாயகம் அவர்களின் ஜனன தினமும் கொண்டாடப்பட்டது.







நிகழ்வுகள் ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்த படி சரியாக இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகின. நிகழ்வின் முதல் அம்சமாக அதிசங்கைகுரிய ஷெய்கு நாயகம் மிஸ்பாஹி அவர்களின் விசேட உரை இடம் பெற்றது.


இவ்வுரையில் சங்கைகுரிய ஷெய்குநாயகம் அவர்கள் 

"மனிதன் தன் வாழ்நாள் முழுவதையும் வணக்கமாக்கிக் கொள்ள வேண்டும். என்பதுடன் நாம் புரிகின்ற வணக்கங்கள் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அமையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு முதலில் நமது உள்ளங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்! 


"நாய் மற்றும் உருவம் இருக்கின்ற வீடுகளுக்கு மலக்குகள் வர மாடடார்கள்" என்பதற்கு நாம் குடியிருக்கும் வீட்டையும் அது குறிக்கும் நமது உள்ளத்து வீட்டையும் அது குறிக்கும்.


நமது உள்ளத்தைப் பொறுத்தவரை நாயின் நல்ல குணங்களை விட்டுவிட்டு கெட்ட குணங்களை நாம் வளர்த்துக் கொள்கின்றோம் அவ்வாறாயின் நமது அமல்கள் இறைவனிடம் ஏற்றுக் கொள்ளபடுவது எவ்வாறு? எனவே நாம் நமது உள்ளங்களை மிகவும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். 

மற்றவர்களின் குறைகளைக் கதைப்பது, கோள் சொல்வது என்பவற்றை நாம் கண்டிப்பாக தவிர்ந்து நடக்க வேண்டும் இது ஒரு முரீதுக்கு கட்டாயமானதாகும்.

அத்துடன் கண்மணி நபீ (ஸல்) அவர்கள் நான் மூன்று விடயங்களை உங்கள் உலகில் விரும்புகின்றேன் 1. தொழுகையில் கண் குளிர்ச்சி ஏற்படுவது, 2.பெண் 3. நறுமணம் என்று குறிப்பிட்டார்கள். தற்போது எனக்கு வழங்கப்பட்டுள்ள நேரத்துக்குள் இவை அனைத்தையும் என்னால் விளக்க முடியாது முதலாவதான தொழுகையில் கண் குளிச்சி எங்களில் யாருக்காவது ஏற்பட்டுள்ளதா? இல்லை இதற்கு காரணம் நாம் சரியாக தொழவில்லை.
ஷெய்குநாயகத்துடன் கலீபா மௌலவீ எம்.எம்.மஜீட் (றப்பானீ)
தொழுகையில் கண் குளிச்சி ஏற்பட வேண்டுமாயின் நாம் நமது உள்ளத்தை மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் அத்துடன் தரீக்காப் காட்டுகின்ற பாதையில் செவ்வனே பயணிக்க வேண்டும். இல்லாவிடில் அது சாத்தியமாகாது.

அத்துடன் நான் நமது வாழ்கை முழுவதையும் வணக்கமாக்கிக் கொள்வது எப்படி என்பதை நாம் ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளோம். அதனை தெரியாதவர்கள் தெரிந்தவர்களிடன் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.


எனக்குறிப்பிட்டு மிகவும் ஆழமான ஒரு உபனியாசம் நிகழ்த்தினார்கள்.

வழமைபோல ஷெய்குநாயகம் அவர்களின் இந்த விசேட உரையின் பின்னர் காதிரிய்யஹ் றாத்திப் மஜ்லிஸ் ஷெய்கு நாயகம் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. அதனை சங்கைகுரிய கலீபா மௌலவீ அப்துல் மஜீட் (றப்பானி) அவர்கள் வழிநடாத்தினார்கள்.



அதனைத் தொடர்ந்து ஷெய்குநாயகம் அவர்களின் 69வது பிறந்த தின நிகழ்வுகள் ஆரம்பமாகின.

முதலாவதாக சங்கைகுரிய ஷெய்குநாயகம் அவர்களை கௌரவிக்குமுகமாக காதிரிய்யஹ் திருச்சபையின் தலைவரும், றப்பானிய்யஹ் அறபுக்கலாபீட சிரேஷ்ட விரிவுரையாளருமான கலீபா மௌலவீ எம்.எம். அப்துல் மஜீத் றப்பானீ அவர்களினால் பொன்னாடை போர்த்தப்பட்டது.
பொன்னாடை போர்த்தப்படும் காட்சி

அடுத்ததாக புனித காதிரிய்யஹ் திருச்சபையினால் அதிசங்கைகுரிய ஷெய்கு நாயகம் அவர்களுக்கு ஒரு நினைவுச் சின்னம் வழங்கிவைக்கப்பட்டது அதனை காதிரிய்யஹ் திருச்சபையின் செயலாளரும் ஆங்கில ஆசிரியருமான எச்.எம்.அமீர் (அபிமான் சேர்) அவர்கள் வழங்கினார்கள்.


அத்துடன் காத்தான்குடியில் மனிதாபிமானப் பணிகளில் முன்னிலையில் செயற்பட்டுவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான அஷ் ஷுப்பான் நலன் புரிச்சங்கத்தினால் அதி சங்கைகுரிய ஷெய்குநாயகம அவர்களுக்கு ஒரு கௌரவ நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது அதனை அதன் தலைவர் சட்டத்தரனி எம்.ஐ.அஜ்மீர் ஹாஜா நவாஸ் அவர்கள் வழங்கினார்கள்.


அடுத்ததாக அதிசங்கைக்குரிய ஷெய்குநாயகம் அவர்களுக்கு ஒரு விசேட அன்பளிப்பை காத்தான்குடி தீன் நகர் மஸ்ஜித் மன்பஉல் ஹைராத்தின் தலைவர் அல்ஹாஜ் எம். ஹக்கீம் அவர்கள் வழங்கினார்கள்.


அதனைத் தொடர்ந்து அல்ஹாஜ் அப்துல் ஜவாத் வலீயுல்லாஹ் நிதியத்தின் கீழ் இயங்கும் எட்டு நிறுவனங்களுக்கு புனித அல்குர்ஆன் பிரதிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.










தொடர்ந்து அஷ் ஷுப்பான் நலன் புரிச்சங்கத்தின் மக்கள் நல சேவையின் வரிசையில் சிறு நீரக மாற்றுச் சிகிச்சைக்காக ஆன்மீக சகோதரர் மஷ்ஹுர் அவர்களுக்கு அன்பளிப்பாக காசோலை வழங்கப்பட்டது அதனை அதி சங்கைக்குரிய ஷெய்குநாயகம் அவர்கள் தனது கரங்களினால் வழங்கி வைத்தார்கள்.
இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ள ஆன்மீக சகோதரர் மஷ்ஹுர்
அடுத்த நிகழ்வாக அதிசங்கைகுரிய ஷெய்குநாயகம் அவர்களுக்கு நீண்ட ஆயுள் வேண்டி விசேட துஆப் பிராத்தனை இடம் பெற்றது. இதனை அல் ஜாமிய்யத்துல் றப்பானிய்யஹ் அரபிக் கலாசாலையின் அதிபரும் நாடரிந்த கவிஞரும் பல்நூல் ஆசிரியருமான மௌலவீ எச்.எம்.இப்றாஹிம் நத்வீ அவர்கள் நிகழ்த்தினார்கள்.




அத்துடன் அதிசங்கைகுரிய ஷெய்குநாயகம் அவர்களுக்கு நீண்ட ஆயுள்வேண்டி ஒவ்வெறுவரும் ஐங்காலத் தொழுகையில் ஓதிவரும் வண்ணம் ஒரு துஆவினை அஷ்ஷுப்பான் நலன்புரிச்சங்கம் சமூகமளித்திருந்தவர்களுக்கு வழங்கியது.




அதனைத் தொடர்ந்து தபறூக் வழங்கப்பட்டதுடன் நிகழ்வுகளின் இறுதி அம்சமாக அஷ்ஷுப்பான் நலன்புரிச்சங்கத்தினரின் உத்தியகபூர்வ இணையத்தளம் அதிசங்கைகுரிய ஷெய்குநாயம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

ஷெய்கு நாயகம் அவர்களால் உத்தியபூர்வமாக திறந்து வைக்கப்படும் இணையத்தளம்

அத்துடன் நிகழ்வுகள் யாவும் சரியாக இரவு 11.00 மணியளவில் நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

நிகழ்வுகளின் சில புகைப்படங்கள்







 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK