இலங்கையில் காத்தான்குடி தீன் வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் மன்பஉல் ஹைராத் பள்ளிவாயலில் அதிசங்கைகுரிய ஷெய்குநாயகம் கலாநிதி மௌலவீ ஏ.ஜே.அப்துல் ரஊப் (மிஸ்பாஹீ, பஹ்ஜீ) அவர்களின் 69 வது ஜனன தினத்தை முன்னிட்டு 05.02.1013 அன்று அஸர் தொழுகையைத் தொடர்ந்து மரநடுகை விழா ஒன்று இடம் பெற்றது.
இந்நிகழ்வில் சங்கைகுரிய மௌலவீமார்கள், காத்தான்குடி நகர சபையின் பிரதி மேயர் அல்ஹாஜ் ஜெஸீம், மற்றும் நிருவாகசபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின்போது மூன்று ஈச்சமரங்கள் ஹைராத் பள்ளிவாயல் வளாகத்தில் நாடப்பட்டன. இந் நிகழ்வுகளுக்கு ஹைராத் பள்ளிவாயலின் தலைவர் அல்ஹாஜ் ஹக்கீம் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
இந்நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்கள் மாத்திரம் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படுகின்றன.