
தபால் -09
சாலிஹான ஆலிமான பிள்ளைக்கு,
ஈகையாளனான அல்லாஹ் அளவில் ஆசையால் நிரம்பியது, நேர்வழி நடந்தவர்களைக் கொண்டு நல்லெண்ணம் கொண்டுள்ளதுமான உமது தபால் வந்தது. நானும் அனைத்து சகோதரர்களும் சந்தோசமானோம். அவர்களுக்கு உமது சலாத்தை எட்டி வைத்தேன். அவர்களும் உமக்கு சலாம் சொன்னார்கள். கல்வியிலும் அமலிலும் சரக்கு குறைந்த சின்ன மனிதன் நான்.!
அல்லாஹ் திருக்குர்ஆனில் ‘அல்ஹம்துலில்லாஹ்’ என ஆரம்பித்திருப்பதை தாங்கள் அறிவீர்கள். ஓவ்வொறு புகழிலும் எதார்த்தத்தில் அவனே புகழப்பட்டவன், வேறு எவருமில்லை என்பதை அதைக் கொண்டு நாடியுள்ளான்.
எந்தப் பெருளும் அதன் அழகு, எழிலைக் கொண்டே தவிர புகழப்படுவதில்லை. எல்லாப் பொருட்களும் அவனது அழகு வெளியாகும் ஸ்தலமாகவும், கண்ணாடியாகவும் இருக்கிறது. அழகு இறைவனின் நூர்! “வானங்கள் பூமியின் பிரகாசமாக அல்லாஹ் இருக்கிறான்” என்று திருமறையில் கூறுகின்றான்.
“அய்னமா துவல்லூ பதம்ம வஜ்ஹுல்லாஹ்” – எங்கு திரும்பினாலும் அங்கு இறைவனின் திருமுகம் இருக்கிறது. எனக் கூறப்பட்டதிலிருந்து நாடப்பட்டதும் இதுதான்.
எந்தப் பொருளையும் ஏதாவதொரு அழகைவிட்டு நீங்கியதாக காண முடியாது. அழகு என்பது எதார்த்தமானது. அசிங்கமென்பது கவனிப்பான சேர்மானமானது. அழகின் ஹகீகத்-உண்மையான தன்மை, வாஜிபுல் உஜூது – இருப்பு அவசியமான, எல்லாவற்றையும் சூழ்ந்தறிந்த இறைவனாகும்.
எந்தப் பொருளையும் வாஜிபுல உஜூதானவனைப் பார்ததே தவிர நீ பார்க்க மாட்டாய். எனினும், இதை நீ உணருவதில்லை. இதை உணர்ந்தவர்கள் “நான் எப்பொருளையும் பார்ப்பதில்லை: அதை பார்க்குமுன் இறைவனைப் பார்த்தே தவிர” என்பர்.
றவ்ழா ஷரீபாவின் உள்புறத் தோற்றம் |
இந்த விளக்கத்தின் மூலம் “அல்ஹம்துலில்லாஹ்” “அல்லாஹூ நூருஸ் ஸமாவாத்தி வல் அர்ழி” “வகுவ மஅகும் அய்னமா குன்தும்” என்ற மூன்று ஆயத்துக்களின் கருத்துக்களும் ஒன்றே என்பது தரிபட்டு விட்டது.
“அலா இன்னஹு பிகுல்லி ஷெய்இன் முஹீத்” – அறிந்து கொள் நிச்சயமாக அவன் சகல பொருட்களையும் சூழ்திருக்கின்றான் என்ற ஆயத்தின் கருத்தும் ஒன்றேதான்.
உங்களுடைய முதற் கடமை
மறதியோடு எப்பொருளையும் பார்க்காதீர்கள். எப்போதும் எந்த வினாடியும் விழிப்போடும், அகப்பார்வையோடுமிருங்கள். உங்களது உள். வெளிப் புறங்களில் ஒவ்வோரு பகுதியும் அல்லாஹ்விலே மூழ்கிப் போக வேண்டும். கேட்கப்படுகின்ற, பார்க்கப்படுகின்ற, சுவைக்கப்படுகின்ற, தொடப்படுகின்ற, நுகரப்படுகின்ற, அறியப்படுகின்ற யூகிக்கின்ற எல்லாவற்றிலும் அவனை (இறைவனை) சாட்சியாகக் காண வேண்டும்.
உங்களது வெளி, உல்புலங்களில் ஒவ்வொன்றும் இறைவனில் மூழ்கியதாக ஆகட்டும். ஏனெனில் வெளிரங்கமான உள்ரங்கமான உலகங்களின் ஒவ்வொறு அணுவிலும் அவனது அழகு உண்டாயிருக்கிறது. அதுவே வாஜிபுல் உஜூதாகும்.
இரண்டாவது கடமை.
நான் உங்களுக்கு விளங்கித் தந்ததுபோல் மார்புகளுக்கு இரண்டு விரல் அகலத்திற்கு கீழ் இடது புறத்திலமைந்திருக்கும் இதயக் கமலத்தில் உங்கள் உள்ரங்கமான, வெளிரங்கமான புலன்கள் எல்லாவற்றையும் கொண்டும், முழு ஊக்கத்தையும் கொண்டும் முன்னோக்க வேண்டும். அங்கு இறைவன் தோற்றமாகி இருக்கிறான் என்று உறுதியாக நம்ப வேண்டும்.
“எனக்கு எனது பூமியும் விசாலமாகவில்லை, எனது வானமும் விசாலமாகவில்லை, எனினும் பத்திமானான முஃமினின் இதயம் விசாலமானது” என அறிவுறுத்துவது போல!
அனைத்து உலகமும் கண்ணைப் பொத்தியபின் கல்பின் தோற்றமாகி இருக்கும் அந்த தாத்து எனும் கடலில் வீழ்ந்து விட்டன. கடலில் உப்புக் கறைந்தது போல கரைந்து விட்டன. கடலைத் தவிர அதாவது மெய்ப் பொருளான வாஜிபான அவனது தாத்தை தவிர வேறு எதுவும் எஞ்சவில்லை.
உங்களுடைய தூக்கமும் இப்படியே ஆகட்டும். அதாவது நீங்கள் தூங்கினாலும் இதே முறையில் தூங்குங்கள். கல்புக் கண்ணை கடலின் காட்சியில் அதாவது வாஜிபான தாத்தின் காட்சியில் பெரிய கியாமத் நாள் ஏற்படும் வரை இருந்ததாக்குங்கள்.
“லிமனில் முல்கல் யவ்ம- இன்று அரசாட்சி யாருக்கு” என்பதை அகக்காது கொண்டு கேட்ப்பீர்கள்.
காதிரிய்யா தரீக்காவின் ஓழுக்கங்களில் முக்கியமானவை:
- ஷரீஅத் சட்டங்களை பேணி நடப்பது.
- தரீக்காவின் ஒழுங்குகளை பேணிக்காப்பது.
- ஷெய்கின் உகப்பில் மூழ்கி விடுவது. -அல்லாஹ்வின் பக்கம் போவது அவரிலேயே மட்டாக்குவது. எல்லாவற்றிலும் மிக முக்கியமானது ஷெய்கில் பனாவாகி அழிந்து விடுவது. அவரிலேயே மரணித்து விடுவது.
நமக்கும், நமது அன்பர்களுக்கும் இப்பாதையில் நடப்பதற்கு இறைவன் அருள் புரிவானாக. ஷெய்கின் உப்பிலேயே எப்போதும் நிலைபாடாக இருத்தாட்டுவானாக.
இறைவா! ஷெய்கு அப்துல் காதிர் ஜீலானி அவர்களுடைய உகப்பில் எங்களை வாழச் செய்வாயாக! அவர்களைத் தேடியவர்கள், ஆசித்தவர்களின் வகுப்பிலேயே எங்களை இம்மை மறுமையில் ஆக்குவாயாக! நிச்சயமாக நீயே கேட்பவனும் அறிபவனுமாவாய். எங்கள் தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அன்னார் குடும்பத்தினர், தோழர்கள் மீதும் உனது கருணையும், ஈடேற்றத்தையும் சொரிவாயாக.
-ஷெய்குனா ஸூபி ஹலரத் அவர்களின் வரலாற்றுச் சுருக்கம் நூலிலிருந்து-
05.03.2013