Monday, May 7

ஏறும் கொடியும் ஈமான் பலமும்

ஈழத்து ஹஸ்ஸான் கவித்திலகம்

காத்தான் குடி இன்போ இணையத்தளத்தில் கடந்த சிலவாரங்களின் முன்பு மதியன்பன் மஜீத் எனும் பெயர் பெற்ற ஒருவர் கல்முனை கடற்கரைப்பள்ளிக்குச் செல்வது ஹராம், பித்அத், ஷிர்க், என்றும்,

அங்கு கொடியேற்றுவது மார்க்கத்திற்கு முற்றிலும் முறன் பட்ட விடயமாகும் என்றும் இப்படியான விடயங்கள் பற்றி இமாம்கள் பள்ளிவாயலில் தயங்காமல் சொல்லவேண்டும், அதற்கு ஆதரவாக சில உலமாக்கள் இருக்கின்றார்கள் எனவும் சுன்னத் வழி வாழ்கின்ற மக்களையும் சாடி "ஏறும் கொடியும் இறங்கும் ஈமானும்" என்ற தலைப்பில் கவிதை ஒன்றினை இடம் பெறச் செய்திருந்தார். 

அவரின் ஆன்மீக உயிரோட்டம்இழந்த அக்கவிக்கு கவிஞரும், மௌலவியுமான சங்கைக்குரி அல்ஜாமிஅத்துர்றப்பானிய்யஹ் அறபுக்கலாபீட அதிபர், ஈழத்து ஹஸ்ஸான் மௌலவீ எச்.எம்.எம். இப்றாஹீம் நத்வி அவர்கள் "ஏறும் கொடியும் ஈமான் பலமும்" என்னும் தலைப்பில் மதியன்பனின் மதியீனத்தை விளக்கிக்காட்டி தகுந்த சாட்டையடி வழங்கியிருக்கின்றார்கள். நாமும் படித்துச்சுவைப்போம். மதியன்பனின் மதிக்காகவும், நேர்வழிக்காகவும் மதியின் விதி எழுதியவனிடம் பிரார்த்திப்போம்...




ஏறும் கொடியும் ஈமான் பலமும்
நத்வி

ஆழமறியாமல் காலை விட்டதேன்?
மதியன்பன் மதியிழந்ததேன்?

இவரது கவிதைக் கிறுக்கு
கியாம நாளின் அடையாளங்களில் ஒன்று
“ஜாஹில் மார்க்கம் பேசுவான்“ 
என்ற நபீ மொழி
இதற்குச் சான்று!

தம்புள்ள சாத்தான்
இவரது இதயத்துள்
புகுந்து கொண்டானோ.....?
அதனாற்றான் – 
தர்காக்களை உடைக்க
உலமாக்களை அழைக்கிறார்.


“ஏறும் கொடியால் ஈமான் இறங்குதாம்“
என்னே இவர் கண்டுபிடிப்பு.
நாளை மறுமையில்
இவருக்கு
“லிவாஉல் ஹம்து“ கொடியின்
நிழல் கிடைக்குமோ?

அங்கே – 
பேரினவாதிகள்
பள்ளிவாயலை உடைக்க
இவர் போன்றவர்தான்
முன்மாதிரியானவர்கள்
காரணம்
இவர்கள்தான்
மார்க்கம் சொல்லும்
மத்ரஸாக்களை உடைத்து
திருக்குர்ஆனை எரி்த்து
மகான்கள் வாழும்
தர்காக்களை உடைத்து
பௌத்தர்களுக்கு
பயிற்சியளித்தவர்கள்.!


இவர்
காபிர்களின் கொடிக்கும்
முஸ்லிம்களின் கொடிக்கும்
வித்தியாசம் புரியாதவர்.!

கையிலேந்திய கொடி
கீழே விழக் கூடாதென்பதற்காக
உயிர்த்தியாகம் செய்த
வீர சஹாபாக்களின்
வரலாறு தெரியாதவர்.!

புனித “லைலதுல் கத்ர்“ இரவில்
ஜிப்ரீல் தலைமையில்
மலக்குகள் கொடியோடிறங்கும்
வரலாறு படிக்காதவர்.!

ஆன்மீக ரீதியில்
வலீமார்களுக்காக
ஏற்றப்படும் கொடிகளை
ஷிர்க் என்று சொல்லும் இவர்
தேசியக் கொடி போன்ற
இலௌகீகக் கொடிகள்
ஏற்றப்படும் போது
எழுந்து நின்று
மரியாதை செய்பவர்!

ஆம்
இவரொரு
வீதி ஆர்ப்பாட்டக்காரர்.
முஸ்லிம்களிடையே
பித்னாவைத் தூண்டும்
ஒரு பறை.!

“மரணித்துப் போனவர்களால்
ஒன்றும் செய்ய முடியாது“ 
என்று சொல்லும் இவர்
“அதான்“ துஆ ஏன் ஓதுகிறார்?
அத்தஹி்ய்யாத்தில்
நபிகளுக்கு ஏன்
சலாம் சொல்கிறார்?

ஆழமறியாமல் காலை வைப்பது
மதியீனம்!
துறை தெரியாமல் தோணி தள்ளுதல்
அறிவீனம்!

தர்காக்களைக் குறிவைத்த
இவரது கவியம்புகள்
நபிகளின் தர்காவிலும் மோதி
இவரை நோக்கி
திரும்பி விட்டன!

பொறுத்திருந்து பார்ப்போம்
மதியின் விதி – 

மாறும் விதத்தை!
நன்றி 
சம்ஸ் தளம்.

 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK