பஞ்ச வர்ணங்களாகி
பற்பல விதங்கொண்ட விந்துநாதத்துட்
பதிந்துமுளை பருவமாகி
வேரோடி யோக பூமிக்குள் வளர்ந்தருள்
விளைந்தொழுதுகு தருவுமாகி
விண்ணாகி, மண்ணாகி, யெண்ணாகி. வெகுவாகி
விரிவாகி மறைவுமாகி
தூராதி தூரத்தி னுந்தூர மாகியதி
சூழ்ச்சிச் சமீப மாகித்
தோற்றுமொளி புரியவடி யேனுமுமை நம்பினேன்
துரிதமுட னாளுதற்கே
வாராரு மருண்மாரி யுள்ள நீர் பின்றொடர
வள்ளலிற சூல்வருகவே வளருமரு ணிறைகுணங்
குடிவாழு மென்னிருகண்
மணியே முஹ்யித்தீனே.
--------குணங்குடி மஸ்தான் சாகிப் அவர்கள்------------
ஆலங்களின் அகமியம் எனும் தலைப்பில் அதிசங்கைக்குரிய ஞானபிதா ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹி,பஹ்ஜீ அவர்கள் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆற்றிய உரை..