அதிசங்கைகுரிய ஷெய்கு நாயகம் |
கடைக்கண் பார்வைக்காய் ஏங்குவோர் கோடி
ஏந்தலே தங்களின் திருவருள் நாடி
காத்த நகரிலே கர்ஜிக்கும் சிங்கம்
எங்கள் காத்தமுன் நபீயின் சித்தீக்கின் வம்சம்
பொருமையை ஆடையாய் போர்த்திய தங்கம்
ஆடையாய் எங்களை காத்திடும் சிங்கம்
இறையையும் மறையையும் அறிந்திட்ட ஞானி
இறைமையை எங்களுக்கு விளக்கிட்ட கோ நீ(ர்).
ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்திட வேண்டி
அழுகின்றோம் சலிக்கின்றோம் இறைவனை வேண்டி
ஈத் முபாறக்.
கவியாக்கம் - பைசான் மதீனா
14.10.2013