Sunday, June 30

27வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி

கரீபே நவாஸ், அதாயே றஸூல், குத்புல் ஹிந்து
ஹழ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ (றழி) அவர்களினதும்,
அன்னாரின் அருந்தவப் புதழ்வர் ஸாஹிபுல் ஜலால், ஸர்தாரே ஸர்வார்
ஹழ்ரத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ (றழீ) அவர்களினதும்

மின் விளக்குகளினால் அமைக்கப்பட்டுள்ள அஜ்மீர் ரோஜா

27வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியும் 13வது வருட மௌலவீ பாஸில் பட்டமளிப்பு விழாவும் இன்ஷா அல்லாஹ் நாளை 30.06.2013 ஞாயிற்றுக் கிழமை இலங்கையில் காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்ஆஹ் பள்ளிவாயலில் மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வினைச் சிறப்பிக்குமுகமாக அகமியம் இணையத்தளம் கந்தூரிக்காக அலங்கரிக்கப்பட்டு காட்சிதரும் காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் சில புகைப்படங்களை வெளியிடுவதுடன்

அதிசங்கைகுரிய ஷெய்ஹூனா மௌலவீ ஏ.அப்துர் ரஊப் மிஸ்பாஹி, பஹ்ஜீ அவர்கள்  கடந்த மாதம் 18.05.2013 சனிக்கிழமை இடம் பெற்ற புனித ஸஹிஹுல் புகாரி தினத்தில் "மரணித்த பின்னரும் உயிர் வாழும் அற்புத ஜீவன்கள்" என்ற தலைப்பில் ஆற்றிய ஆன்மீகப் பேருரையினை ஆன்மீக சகோதரர்களுக்காக MP3 வடிவில் பதிவிடுகிறது.

சங்கைகுரிய ஸஹாபி ஹுஜ்ர் இப்னு அதி (றழி) அவர்களின் கப்ர் உடைக்கப்பட்டது தொடர்பான சிறப்புரை இதுவாகும்.

கேட்பதற்கு Play செய்யவும்



("டவுன் லோட் செய்ய" என்பதன் மேல் கிளிக் செய்து உங்கள் கணணியில் பயான் ப்ளே(Play) ஆகும்போது Mouse யில் Right Click செய்து "Save as"என்பதை கிளிக் செய்யவும்)

ஹாஜாஜீ மாகந்தூரி புகைப்படங்கள் உள்ளே...


ஹாஜாஜீ கந்தூரிக்காக தயாராகவிருக்கும் பத்ரிய்யஹ் பள்ளிவாயலின் தற்போதைய இரவுத் தோற்றம்.









அகமியம் இணையத்தளம்
29.06.2013

 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK