உமர் மாமா காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ஆரம்பகாலத்தில் காத்தான்குடியில் சூபிசம் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் பரப்பப்பட்டுவந்தபோது சங்கைகுரிய ஷெய்கு நாயகம் காதிமுல் கவ்மி மௌலவீ அல்ஹாஜ் ஏ.ஜே.அப்துல் றஊப் மிஸ்பாஹி அவர்களுக்கு அவர்களுடன் இணைந்த உலமாவுகளுக்கும் ஆதவாளர்களுக்கும் மிக உறுதுணையாக அமைந்த உமர் தோட்டத்தின் உரிமையாளரும் சங்கைகுரிய ஷெய்கு நாயகம் அவர்களுக்கு பல வருடங்கள் உதவியாளராக இருந்து வந்தவரும் எல்லோராலும் "உமர் மாமா" என்று அன்பாக அழைக்கப்பட்டவருமான அகமட் லெப்பை உமர் லெப்பை அவர்கள் இன்று அதிகாலை 3.15 மணியளவில் இறையடிசேர்ந்தார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இவர்கள் கலீமத்தும்மா மற்றும் அகமட் லெப்பை தம்பதியினரின் புதல்வர் ஆவார்கள். அன்னார் இறையடி சேரும் போது அன்னாருக்கு வயது 83 ஆகும். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று பி.ப 4.00 மணிக்கு மஸ்ஜிதுல் மன்பஉல் ஹைராத்தில் தொழுகை நடாத்தப்பட்டு ஹைராத் மையவாயில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவர்கள் கலீமத்தும்மா மற்றும் அகமட் லெப்பை தம்பதியினரின் புதல்வர் ஆவார்கள். அன்னார் இறையடி சேரும் போது அன்னாருக்கு வயது 83 ஆகும். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று பி.ப 4.00 மணிக்கு மஸ்ஜிதுல் மன்பஉல் ஹைராத்தில் தொழுகை நடாத்தப்பட்டு ஹைராத் மையவாயில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாருக்காக அகமியம் பிராத்திப்பதுடன் அன்னாருக்கா எமது வாசர்களையும் பிராத்தனை செய்யுமாறுஅன்புடன் வேண்டிக் கொள்கின்றது.